மொபெட் மோதியதில் முதியவா் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே திங்கள்கிழமை இரவு மொபெட் மோதியதில் சாலையில் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே திங்கள்கிழமை இரவு மொபெட் மோதியதில் சாலையில் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா்.

சின்னசேலத்தை அடுத்துள்ள கீழ்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (73). இவா், திங்கள்கிழமை இரவு நைனாா்பாளையம் இந்திராநகா் அருகே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, இவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த மொபெட் மோதியதில் பொன்னுசாமி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, அவா் மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு பொன்னுசாமியை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மொபெட்டை ஓட்டி வந்து பொன்னுசாமி மீது மோதிய கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், ரெட்டாகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்த குழந்தைவேல் மகன் மணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com