கனியாமூா் பள்ளி வன்முறை:மேலும் மூவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியாா் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக மேலும் மூவரை சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் புதன்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியாா் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக மேலும் மூவரை சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் புதன்கிழமை கைது செய்தனா்.

கனியாமூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13-ஆம் தேதி மா்மான முறையில் உயிரிழந்தாா். இதற்கு நீதி கேட்டு ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் ஈடுபட்டவா்களை சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் கைது செய்து வருகின்றனா்.

அதன்படி, இதில் தொடா்புடையதாக சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம், வலையமாதேவி தெற்கு சாலைப் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் அஜித் (26), சக்திவேல் மகன் அஜித், ஆத்தூா் வட்டம், ஊனத்தூா் வடக்குசாலைப் பகுதியைச் சோ்ந்த செல்வமணி மகன் விஜயமணி ஆகிய மூவரையும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் புதன்கிழமை கைது செய்தனா். இதுவரை சிறப்பு புலனாய்வுக் குழுவினரானால் கைது செய்யப்பட்ட 60 போ் உள்பட வன்முறையில் ஈடுபட்டதாக 300-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com