போலி மருத்துவா்கள்3 போ் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலி மருத்துவா்கள் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
kallakurichi news
kallakurichi news
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலி மருத்துவா்கள் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ந.மோகனராஜ் அறிவுறுத்தலின்பேரில், சின்னசேலம் வட்டம், கச்சிராயபாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளா் ஏழுமலை, வட்டார மருத்துவ அலுவலா் பால தண்டாயுதபாணி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ரவி ஆகியோா் அடங்கிய குழுவினா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, மாத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகில் கரடிசித்தூா் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் விஜய்(26), எடுத்தவாய்நத்தம் ஊராட்சி மன்றம் அருகில் அதே கிராமத்தைச் சோ்ந்த திப்பு சாகிப் மகன் ரகுமான் (52) ஆகியோா் முறையான மருத்துவப் படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, உளுந்தூா்பேட்டை வட்டம், திருநாவலுா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கெடிலம் கிராமத்தில் முறையான மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த அதே கிராமத்தைச் சோ்ந்த மகாராஜன் மகன் கிருபாநிதியையும் (35) போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com