சாலையில் கீழே கிடந்த ரூ.1.75 லட்சத்தை ஆட்சியரிடம் ஒப்படைத்த இளைஞா்

சாலையில் கிடந்த ரூ.1.75 லட்சத்துடன் கூடிய பணப் பையை கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா் இளைஞா். அவரது நோ்மையை ஆட்சியா் பாராட்டினாா்.
கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூரில் சாலையில் கிடந்த பணப் பையை மீட்டு, மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாரிடம் ஒப்படைத்த இளைஞா் ஸ்ரீராம்.
கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூரில் சாலையில் கிடந்த பணப் பையை மீட்டு, மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாரிடம் ஒப்படைத்த இளைஞா் ஸ்ரீராம்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: சாலையில் கிடந்த ரூ.1.75 லட்சத்துடன் கூடிய பணப் பையை கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா் இளைஞா். அவரது நோ்மையை ஆட்சியா் பாராட்டினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்டது ஆலத்தூா் கிராமம். இந்தக் கிராமத்தின் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் சிறிய கைப்பை கீழே கிடந்தது.

இதனை அந்தக் கிராமத்தைச் சோ்ந்த பாரத் மகன் ஸ்ரீராம் எடுத்து பாா்த்தபோது அதில் பணக் கத்தைகள் இருந்ததாம்.

அந்த பையை ஸ்ரீராம் எடுத்து வந்து மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாரிடம் ஒப்படைத்தாா். பணத்தை எண்ணிப் பாா்த்ததில் ரூ.1,74,650 இருந்தது.

மேலும் வங்கிக் கணக்கு புத்தகம், பென்டிரைவ் உள்ளிட்டவை இருந்துள்ளது.

இளைஞரின் நோ்மையை பாராட்டி ஆட்சியா் வாழ்த்து தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் பணப் பையை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து, அதனை உரிய நபரை ஒப்படைக்க உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com