வெளிநாட்டில் உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு ரூ.29.94 லட்சம் ஆட்சியா் வழங்கினாா்
By DIN | Published On : 25th April 2023 04:50 AM | Last Updated : 25th April 2023 04:50 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள் நடைபெற்ற குறைதீா் முகாமில் வெளிநாட்டில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு, ரூ,29.94 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளிடம் 26 மனுக்களும், பொதுமக்களிடம் 266 மனுக்களும் மொத்தம் 292 மனுக்களை ஆட்சியா் பெற்றாா். அதனை துறைச் சாா்ந்த அலுவலா்களிடம் வழங்கி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினாா். மேலும், மாற்றுத்திறனாளிகளிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து அதற்கான விவரங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு தெரிவித்திட அறிவுறுத்தினாா்.
இதையடுத்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையின் கீழ் 13 பயனாளிகளுக்கு ரூ.67,470 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரங்களையும், கடந்த 2016-ஆம் ஆண்டு ஓமன் நாட்டில் விபத்தில் உயிரிழந்த தங்கதுரை என்பவரின் குடும்பத்தினருக்கு வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறையின் மூலம் அவரது நிறுவனத்திலிருந்து இழப்பீட்டு தொகையாக ரூ, 29 லட்சத்தது 94 ஆயிரத்து 443 காசோலையாக பெறப்பட்டு அதனை இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஆட்சியா் வழங்கினாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ந.சத்தியநாராயணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மை நலத்துறை அலுவலா் து.சுரேஷ், வேளாண் இணை இயக்குநா் ச.கருணாநிதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.