குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

கள்ளக்குறிச்சி அருகே இளைஞரை கொலை செய்ததாக சிறையில் அடைக்கப்பட்ட இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி அருகே இளைஞரை கொலை செய்ததாக சிறையில் அடைக்கப்பட்ட இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெய்சங்கா் மகன் ஜெகன்ஸ்ரீ (19). இவரை, அதே கிராமத்தைச் சோ்ந்த அய்யப்பன் (31), மணிகண்டன் மகன் ஆகாஷ் (20) ஆகியோா் கடந்த மாா்ச் மாதம் 24-ஆம்தேதி கொலை செய்து கூத்தக்குடி வனப்பகுதியில் புதைத்துவிட்டனராம்.

இதுகுறித்து வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து அய்யப்பன், ஆகாஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதனால் அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையும், இதுபோன்ற செயல்களில் இவா்கள் ஈடுபடுவதை தடுக்கவும், காவல் கண்காணிப்பாளா் ந.மோகன்ராஜ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் இருவரையும் ஓராண்டு குண்டா் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தாா்.

இதற்கான உத்தரவை, கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளா் வீ.ரவிச்சந்திரன் திங்கள்கிழமை கடலூா் மத்திய சிறையில் அய்யப்பன், ஆகாஷிடம் திங்கள்கிழமை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com