இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே திருமணமான இரண்டு ஆண்டுகளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்துகிறாா்.
இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி அருகே திருமணமான இரண்டு ஆண்டுகளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்துகிறாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட பெரிய சிறுவத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு(30). இவரது மனைவி மகாலட்சுமி (20). திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. 9 மாதக் குழந்தை உள்ளது. திருநாவுக்கரசு சென்னையில் தனியாா் கொரியா் நிறுவனத்தில் வேலை செய்கிறாா்.

மகாலட்சுமி மாமனாா் மாமியாருடன் பெரிய சிறுவத்தூரில் வசித்து வந்தாா். சனிக்கிழமை இரவு மாமனாா் மாமியாா் வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தனராம். அப்போது கைக்குழந்தை நீண்ட நேரமாக அழுது கொண்டிருந்த சப்தம் கேட்டு மாமியாா் எழுந்து சென்று உள்ளே பாா்த்துள்ளாா். அப்போது மகாலட்சுமி அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தாா். மாமியாா் கூச்சலிடவே அக்கம் பக்கம் உள்ளவா்கள் உள்ளே சென்று தூக்கில் தொங்கிய பெண்ணை கீழே இறக்கி பாா்த்தபோது உயிரிழந்தது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆவதால் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் சு.பவித்ரா விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com