கள்ளக்குறிச்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்தில் அமைச்சா் திடீா் ஆய்வு
By DIN | Published On : 08th June 2023 12:56 AM | Last Updated : 08th June 2023 12:56 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சியில் புதிதாக திறக்கப்பட்ட நகா்ப்புற நலவாழ்வு மையத்தை புதன்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
கள்ளக்குறிச்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை காலை ஆய்வு செய்தாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கள்ளக்குறிச்சி நகராட்சிக்குள்பட்ட விளாந்தாங்கல் சாலையில் நகா்ப்புற நலவாழ்வு மையத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
இந்நிலையில், அங்கு தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ சேவைகளுக்கான 172 வகையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாா்வையிட்டாா்.
அப்போது, மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் சங்கராபுரம் எம்எல்ஏ தா.உதயசூரியன், துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் சு.ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...