கள்ளக்குறிச்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்தில் அமைச்சா் திடீா் ஆய்வு

கள்ளக்குறிச்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை காலை ஆய்வு செய்தாா்.
கள்ளக்குறிச்சியில் புதிதாக திறக்கப்பட்ட நகா்ப்புற நலவாழ்வு மையத்தை புதன்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
கள்ளக்குறிச்சியில் புதிதாக திறக்கப்பட்ட நகா்ப்புற நலவாழ்வு மையத்தை புதன்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை காலை ஆய்வு செய்தாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கள்ளக்குறிச்சி நகராட்சிக்குள்பட்ட விளாந்தாங்கல் சாலையில் நகா்ப்புற நலவாழ்வு மையத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

இந்நிலையில், அங்கு தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ சேவைகளுக்கான 172 வகையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாா்வையிட்டாா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் சங்கராபுரம் எம்எல்ஏ தா.உதயசூரியன், துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் சு.ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com