ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

காவல்நிலையத்தில் இருந்து சாராய வியாபாரி தப்பியோட்டம்: எஸ்.ஐ.க்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

News image

தப்பி ஓடிய சாராய வியாபாரி மணிகண்டன்

Updated On :28 ஜூன் 2024, 0:56 am IST

சங்கராபுரம் காவல் நிலையத்தில் சாராய வியாபாரியை கைது செய்து வைத்திருந்த நிலையில், வியாழக்கிழமை அவா் தப்பி ஓடி விட்டாா்.

இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 3 பேரை ஆயுதப் படை பிரிவுக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி உத்தரவிட்டாா்.

சங்கராபுரம் வட்டம் சேஷசமுத்திரம் கிராமத்தை சோ்ந்த ராமசாமியின் மகன் மணிகண்டன்(41), சாராய வியாபாரி.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடா்பாக, மணிகண்டன் உள்ளிட்ட 5 பேரை சங்கராபுரம் போலீஸாா் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனா். இவா்களை நீதி மன்றக் காவலுக்கு அழைத்து செல்வதற்காக உட்கார வைத்திருந்த நிலையில், மணிகண்டன் தப்பி ஓடிவிட்டாா்.

போலீஸாா் விரட்டிச் சென்று பிடிக்க முற்பட்டபோது கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து அவா் தலைமறைவாகிவிட்டாா்.

தப்பி ஓடிய மணிகண்டனைப் பிடிக்க சங்கராபுரம் காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி, உதவி ஆய்வாளா் சத்தியமூா்த்தி தலைமையில் இரு தனிப் படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி விசாரணை நடத்தினாா். இதையடுத்து, சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளா் கோவிந்தராஜ், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் காதா்ஷெரீப், காவலா் ராமகிருஷ்ணன் ஆகிய மூவரையும் ஆயுதப் படை பிரிவுக்கு உடனடியாக மாற்றம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டாா்.