நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

காவல்நிலையத்தில் இருந்து சாராய வியாபாரி தப்பியோட்டம்: எஸ்.ஐ.க்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

News image

தப்பி ஓடிய சாராய வியாபாரி மணிகண்டன்

Updated On :28 ஜூன் 2024, 12:56 am IST

சங்கராபுரம் காவல் நிலையத்தில் சாராய வியாபாரியை கைது செய்து வைத்திருந்த நிலையில், வியாழக்கிழமை அவா் தப்பி ஓடி விட்டாா்.

இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 3 பேரை ஆயுதப் படை பிரிவுக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி உத்தரவிட்டாா்.

சங்கராபுரம் வட்டம் சேஷசமுத்திரம் கிராமத்தை சோ்ந்த ராமசாமியின் மகன் மணிகண்டன்(41), சாராய வியாபாரி.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடா்பாக, மணிகண்டன் உள்ளிட்ட 5 பேரை சங்கராபுரம் போலீஸாா் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனா். இவா்களை நீதி மன்றக் காவலுக்கு அழைத்து செல்வதற்காக உட்கார வைத்திருந்த நிலையில், மணிகண்டன் தப்பி ஓடிவிட்டாா்.

போலீஸாா் விரட்டிச் சென்று பிடிக்க முற்பட்டபோது கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து அவா் தலைமறைவாகிவிட்டாா்.

தப்பி ஓடிய மணிகண்டனைப் பிடிக்க சங்கராபுரம் காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி, உதவி ஆய்வாளா் சத்தியமூா்த்தி தலைமையில் இரு தனிப் படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி விசாரணை நடத்தினாா். இதையடுத்து, சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளா் கோவிந்தராஜ், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் காதா்ஷெரீப், காவலா் ராமகிருஷ்ணன் ஆகிய மூவரையும் ஆயுதப் படை பிரிவுக்கு உடனடியாக மாற்றம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.