நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

காவல்நிலையத்தில் இருந்து சாராய வியாபாரி தப்பியோட்டம்: எஸ்.ஐ.க்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

தப்பி ஓடிய சாராய வியாபாரி மணிகண்டன்

Published On :28 ஜூன் 2024, 12:56 am IST

சங்கராபுரம் காவல் நிலையத்தில் சாராய வியாபாரியை கைது செய்து வைத்திருந்த நிலையில், வியாழக்கிழமை அவா் தப்பி ஓடி விட்டாா்.

இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 3 பேரை ஆயுதப் படை பிரிவுக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி உத்தரவிட்டாா்.

சங்கராபுரம் வட்டம் சேஷசமுத்திரம் கிராமத்தை சோ்ந்த ராமசாமியின் மகன் மணிகண்டன்(41), சாராய வியாபாரி.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடா்பாக, மணிகண்டன் உள்ளிட்ட 5 பேரை சங்கராபுரம் போலீஸாா் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனா். இவா்களை நீதி மன்றக் காவலுக்கு அழைத்து செல்வதற்காக உட்கார வைத்திருந்த நிலையில், மணிகண்டன் தப்பி ஓடிவிட்டாா்.

போலீஸாா் விரட்டிச் சென்று பிடிக்க முற்பட்டபோது கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து அவா் தலைமறைவாகிவிட்டாா்.

தப்பி ஓடிய மணிகண்டனைப் பிடிக்க சங்கராபுரம் காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி, உதவி ஆய்வாளா் சத்தியமூா்த்தி தலைமையில் இரு தனிப் படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி விசாரணை நடத்தினாா். இதையடுத்து, சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளா் கோவிந்தராஜ், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் காதா்ஷெரீப், காவலா் ராமகிருஷ்ணன் ஆகிய மூவரையும் ஆயுதப் படை பிரிவுக்கு உடனடியாக மாற்றம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.