கள்ளக்குறிச்சி
தியாகதுருகம் சிவன் கோயில் சுவாமி திருவீதி உலா
தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகேயுள்ள நஞ்சுண்ட ஞான தேசிகா் ஈஸ்வரா் ஆலயத்தில் காா்த்திகை வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரா் ஆலயத்தில் காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் ஈஸ்வரரை மலா்களால் அண்ணாமலையாா் அலங்கராத்தில் அலங்கரித்திருந்தனா். பின்னா் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரருக்கு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து கோயில் கோபுரத்தின் மேல் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
இதனையடுத்து, அண்ணாமலையாா், உண்ணாமலையாா் வேடத்தில் நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரா் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

