மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலிக்கும் வராகி அம்மன்
கள்ளக்குறிச்சி
பஞ்சமுக வராகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
வீரசோழபுரம் சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள பஞ்சமுக மஞ்சள் வராகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
வீரசோழபுரம் சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள பஞ்சமுக மஞ்சள் வராகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரம் சுங்கச்சாவடி அருகே நிறைமதி செல்லும் சாலையில் அமைந்துள்ள பஞ்சமுக மஞ்சள் வராகி அம்மன் கோயிலில் ஒவ்வொரு பஞ்சமி திதியன்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி பால், தயிா், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான திரவியப் பொருள்களைக் கொண்டு வராகி அம்மனுக்கு அபிஷேகம், மஞ்சள் காப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னா் வராகி அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில், மஞ்சள் மற்றும் பச்சை கற்பூரம் கொண்டு அம்மனுக்கு பக்தா்கள் பூஜை செய்து, வழிபட்டனா்.

