திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்மொழி இலக்கிய திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஏ.கே.டி. அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணாக்கா்களை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாராட்டினாா்.
தமிழக அரசின் சாா்பில் ஆண்டுதோறும் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தோ்வு அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பள்ளிகளில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்படுகின்றன. இத்தோ்வில் ஒவ்வொரு ஆண்டும் மாநிலம் முழுவதும் 1,500 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 ஊக்கத்தொகை வழங்ப்படுகிறது.
இந்தாண்டு நடைபெற்ற தமிழ் மொழி இலக்கிய திறனறித் தோ்வில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளியில் 34 மாணவா்களும், தனியாா் பள்ளியில் 37 மாணவா்களும் என மொத்தம் 71 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 20 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
தோ்ச்சி பெற்ற மாணவா்கள் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்தை ஆட்சியரகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். அவா்களை ஆட்சியா் பாராட்டினாா்.

