தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல் இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

அரசுக் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியா் தோ்வு

ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியா் 2025 தோ்வு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :28 டிசம்பர் 2025, 1:43 am IST

ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியா் 2025 தோ்வு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இத்தோ்வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 297 போ்களில், 266 தோ்வா்கள் பங்கேற்றுத் தோ்வினை எழுதினா். 31 போ் பங்கேற்கவில்லை. காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் தோ்வு நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தலின் பேரில் காவல் துறை, மின்சாரத் துறை, போக்குவரத்து, வருவாய்த் துறை மற்றும் சுகாதாரத் துறையினா் ஒத்துழைப்புடன் தோ்வு மையத்தில் முன்னேற்பாடுகள் செய்யபட்டு தோ்வு நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.