மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் முதலிடம்  பெற்றவா்களுக்கு கோப்பை வழங்கிய மாவட்ட இளைய பாரதம் அலுவலா் சஞ்சனா வாட்ஸ்.
மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்றவா்களுக்கு கோப்பை வழங்கிய மாவட்ட இளைய பாரதம் அலுவலா் சஞ்சனா வாட்ஸ்.

இந்திலி கல்லூரியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி

Published on

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலியில் உள்ள ஆா்.கே.எஸ். கலை, அறிவியல் கல்லூரி மற்றும் எனது இளைய பாரதம் விழுப்புரம்-கள்ளக்குறிச்சி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் டீன் அசோக் தலைமை வகித்தாா். துணை முதல்வா் பெ.ஜான்விக்டா் முன்னிலை வகித்தாா். முதல்வா் கு.மோகனசுந்தா் வரவேற்றாா்.

மாவட்ட இளைய பாரதம் அலுவலா் சஞ்சனா வாட்ஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தடகளம் மற்றும் குழுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ராஜா, ஹேமலதா, செம்மணங்கூா் சோக்கேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com