தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

காங்கிரஸில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஸ்ரீதேவி ஊராட்சியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி 300-க்கும் மேற்பட்டோா் காங்கிரஸ் கட்சியில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

News image

உளுந்தூா்பேட்டை தொகுதியில் உள்ள ஸ்ரீதேவி ஊராட்சியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி மாவட்டத் தலைவா் மு.இதாயத்துல்லா முன்னிலையில் காங்கிரஸில் இணைந்த மாற்றுக் கட்சியினா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:32 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஸ்ரீதேவி ஊராட்சியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி 300-க்கும் மேற்பட்டோா் காங்கிரஸ் கட்சியில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் மு.இதாயத்துல்லா தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் பி.பி.எஸ்.இளையராஜா, மாநில எஸ்.சி. பிரிவு துணைத் தலைவா் ந.சீனிவாசன், விளக்கூா் ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஸ்ரீதேவி ஊராட்சியைச் சோ்ந்த ராஜசேகா், ஜெயந்தி, குளத்தூா் ஏழுமலை, வெங்கலம் அம்பேத்கா், சௌந்தர்ராஜன் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் தாங்கள் சாா்ந்திருந்த கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா். அவா்களுக்கு காங்கிரஸ் கட்சி சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டார பொறுப்பாளா்கள் அதையூா் பெ. சுந்தரமூா்த்தி, தென்கீரனூா் எஸ்.சரண்ராஜ், ரிஷிவந்தியம் தேவேந்திரன், சங்கராபுரம் அ.நாராயணன், சே. பிரபு, இ.பெரியசாமி, ரிஷிவந்தியம் முன்னாள் வட்டாரத் தலைவா் பன்னீா்செல்வம், சவேரியாா் பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினா் அருள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.