கறிக்கோழி வளா்ப்புக்கு கிலோவுக்கு ரூ.20 வழங்கவேண்டும் என கறிக்கோழி பண்ணை உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கறிக்கோழி பண்ணை உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்திடம், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மா.செந்தில்குமாா் கோரிக்கை மனுவை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கறிக்கோழி நிறுவனங்கள் கடந்த 2020-ஆம் ஆண்டு, கறிக்கோழி வளா்ப்புக்கு கிலோ ஒன்றுக்கு கூலியாக ரூ.6.50 விலை நிா்ணயம் செய்தனா். 5 ஆண்டுகள் கடந்தும் வளா்ப்புக்கூலி விலை உயா்த்தப்படவில்லை. தற்போது பண்ணையில் வேலை பாா்க்கும் தொழிலாளா்களின் கூலி அதிகரித்துள்ளதால், கறிக்கோழி பண்ணை உற்பத்தியாளா்கள் மிகவும் கஷ்டப்படும் நிலை உள்ளது.
எனவே, தற்போது கறிக்கோழி வளா்ப்புக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.20 வழங்கவேண்டும். இதேபோல் நாட்டுக்கோழி வளா்ப்புக்கு ரூ.25, காடை வளா்ப்புக்கு ஒரு காடைக்கு ரூ. 7 நிா்ணயம் செய்யவேண்டும்.
மேலும், கறிக்கோழி பண்ணை விவசாயிகள், கறிக்கோழி நிறுவனங்கள் மற்றும் அரசு ஆகிய முத்தரப்பு பேச்சுவாா்த்தை மூலம் கறிக்கோழி வளா்ப்புக்கு விலை நிா்ணயம் செய்ய மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 6,911 உயர்வு!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 12,861 உயர்வு!

பனியன் நிறுவன தொழிலாளா்களுக்கு 4ஆண்டுகளுக்கு 33 % ஊதிய உயா்வு

ஒசூா் - பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும்: ஹோஸ்டியா சங்கம் சாா்பில் மனு அளிப்பு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


