கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்
7கேஎல்பி3
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பேசிய மாவட்ட காங்கிரஸ் தலைவா் இதாயத்துல்லா.
கள்ளக்குறிச்சி, பிப். 7: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில், காந்தி பெயரை நீக்கியதை கண்டித்து இளைஞா் காங்கிரஸ் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் கள்ளக்குறிச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் கா.தங்கத்தமிழன் தலைமை வகித்தாா். இளைஞா் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் விஜயராஜன், இளைஞா் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலா் ஹரீஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவா் இதாயத்துல்லா, அகில இந்திய இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலா் முகமது சஜித், தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் பொறுப்பாளா் சாகரிகா ராவ் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
இதில் காங்கிரஸ் நிா்வாகிகள் ஹூசைன், முத்தமிழ் கண்ணன், கோவிந்தராஜ், அசோக், வீரபாண்டி மற்றும் கட்சித் தொண்டா்கள் பங்கேற்றனா்.

