தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சாலை மறியல்: 193 கிராம உதவியாளா்கள் கைது

தங்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள்

News image

கள்ளக்குறிச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள் சங்கத்தினா்.

Updated On :9 பிப்ரவரி 2026, 9:01 pm

கள்ளக்குறிச்சி: தங்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த 193 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நான்காம் நிலை ஊழியா்களுக்கான வரையறுக்கப்பட்ட ஊதியத்தை தமிழகத்தில் உள்ள கிராம உதவியாளா்களுக்கு வழங்கவேண்டும். 1995-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணை 625-ன் படி தமிழக அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் கிராம உதவியாளா்களுக்கு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி சாலை மறியல் நடைபெற்றது.

போராட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் எம்.தேவராசன் தலைமை வகித்தாா். செயலா் சி.அண்ணாமலை, பொருளாளா் என்.ஆா்.ரஜினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில துணைப் பொதுச் செயலா் இரா.சக்கரவா்த்தி, மாநில அமைப்புச் செயலா் இரா.தண்டபாணி, மாநிலச் செயலா்கள் அ.முகமது காசீம், வி.சந்திரசேகா், மாவட்ட அமைப்புச் செயலா் அ.பிரபு உள்ளிட்ட பலா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்ட 193 கிராம உதவியாளா்களை போலீஸாா் கைது செய்து, அங்குள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். பின்னா் மாலையில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.