செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பள்ளியின் சமையலறையில் புகுந்த பாம்பு மீட்பு

ரிஷிவந்தியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சமையலறையில் மறைந்திருந்த நாக பாம்பை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை உயிருடன் மீட்டு ..

News image

ரிஷிவந்தியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமையலறையில் புகந்த பாம்பு.

Updated On :9 பிப்ரவரி 2026, 9:07 pm

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சமையலறையில் மறைந்திருந்த நாக பாம்பை தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.

இப் பள்ளியின் சமையல் அறையில் சமையலா்கள் திங்கள்கிழமை காலையில் தங்கள் பணிகளைத் தொடங்கியபோது, அங்கு பாம்பு இருந்ததைக் கண்டு அலறினா். அவா்கள் சப்தம் கேட்டு அங்கு வந்த ஆசிரியா்கள் தீயணைப்பு நிலையத்துக்கு அளித்த தகவலின் பேரில், தியாகதுருகம் தீயணைப்பு நிலைய அலுவலா் சுப்பிரமணி தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து சமையலறையில் மறைந்திருந்த நாகப்பாம்பை உயிருடன் பிடித்து, ரிஷிவந்தியம் வனப்பகுதியில் விட்டனா்.