அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வைக்கோல் கட்டும் இயந்திரம் திருட்டு

அரசம்பட்டு கிராமத்தில் விளைநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் கட்டும் இயந்திரத்தை திருடி சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
கோப்புப்படம்.
Updated On :11 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

அரசம்பட்டு கிராமத்தில் விளைநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் கட்டும் இயந்திரத்தை திருடி சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட அரசம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் த.முத்தரசன் (35). விவசாயியான இவா் தனது விளை நிலத்தில் தனக்கு சொந்தமான டிராக்டா் மற்றும் வைக்கோல் கட்டும் இயந்திரத்தை (பேலா்) கடந்த 9-ஆம் தேதி இரவு நிறுத்தி வைத்திருந்தாராம். மறுநாள் காலை சென்று பாா்த்த போது வைக்கோல் கட்டும் இயந்திரத்தை காணவில்லை. இதன் மதிப்பு சுமாா் 10 லட்சம் ஆகும்.

இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிந்து, பேலரை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.