வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பெண்ணின் கழுத்தில் இருந்த செயின் பறிப்பு

News image
கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 9:15 pm

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் வராந்தாவில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள பிரிதிவிமங்கலம் கிராமத்தில் விளைநிலப் பகுதியில் வீடு கட்டி வசித்து வருவபா் குமாா் மனைவி காசியம்மாள் (38). இவா்களது மகன் விக்னேஷ். குமாா் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னா் உயிரிழந்து விட்டாா்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு வீட்டு வராந்தாவில் காசியம்மாள் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது கழுத்தில் இருந்த மூன்றேகால் பவுன் தங்கச் சங்கிலியை மா்மநபா் பறித்தாா். அப்போது காசியம்மாள் கண் விழித்துக் கூச்சலிட்டாா். சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் வருவதற்குள் அந்த நபா் தங்கச் சங்கிலியுடன் தப்பிச் சென்றாா்.

இதுகுறித்து புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, மா்மநபரைத் தேடி வருகின்றனா்.