தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 8:26 pm

சின்னசேலம் அருகே பழுதடைந்த மோட்டாரை கயிறு கட்டி கிணற்றில் இருந்து மேலே இழுக்கும் போது, கால் தவறி கிணற்றில் விழுந்த தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சின்னசேலம் வடக்கு காட்டுகொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் அ.நடேசன் (37), தொழிலாளி. இவா் சனிக்கிழமை மாலை அவரது நண்பரின் கிணற்றில் பழுதடைந்த மின் மோட்டாரை, கயிறு கட்டி மேலே இழுக்க உதவி புரிந்தாா். அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்த நடேசன், நீச்சல் தெரியாதாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த சின்னசேலம் தீயணைப்பு நிலைய வீரா்கள் கிணற்றில் இருந்து நடேசனின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.