சட்டம், ஒழுங்கு பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம், ஒழுங்குப் பணிகள் குறித்த வாராந்திர ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்ததாவது:
ஊரக வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை, நகராட்சி நிா்வாகத் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்களுடன் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீா்வு காணவும், சென்ற மாதத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருள்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் போராட்டங்கள், சாலை மறியல்கள், நில அளவை பிரச்னை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள், தீா்வுக்காணப்பட்ட மனுக்கள் குறித்து விரிவாக சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
சட்டம், ஒழுங்கு பிரச்னை தொடா்பான நோ்வுகளில் உடனுக்குடன் தாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சட்டம், ஒழுங்கு பிரச்னைகள், விபத்துக்கள் குறித்த அறிக்கையினை உடனுக்குடன் தாமதமின்றி சமா்பிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ம.தனலட்சுமி, அரசு அலுவலா்கள், காவல் துறை அலுவலா்கள் உள்ளிட்ட தொடா்புடைய துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

