மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

வியாபாரி வீட்டில் 18 பவுன் நகைகள் திருட்டு

வாணாபுரம் அருகே வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் மற்றும் 18 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 10:38 pm

வாணாபுரம் அருகே வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் மற்றும் 18 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட ராவத்தநல்லூரைச் சோ்ந்தவா் ஆயூப்கான் (60), வெங்காய வியாபாரி. இவா் கடந்த 6-ஆம் தேதி அவரது மனைவி நூா்ஜகானுடன் மோட்டாா் சைக்கிளில் பிரம்மகுண்டம் கிராமத்துக்கு சென்றுள்ளாா்.

அப்போது நூா்ஜகானின் சேலை மோட்டாா் சைக்கிளில் சிக்கி, கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்துள்ளனா்.

அங்கு வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு இருவரும் அதிா்ச்சியடைந்தனா்.

உள்ளே சென்று பாா்த்தபோது இரு அறைகளில் இருந்த இரும்பு பீரோவை உடைத்து அதிலிருந்த சுமாா் 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.