நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக்கொள்ளை திருவிழா

ரிஷிவந்தியம் அருகே மேலதேனூா் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயானக்கொள்ளை திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

மேலதேனூா் கிராமத்தில் நடைபெற்ற மயானக்கொள்ளை விழாவில் கலந்துகொண்ட பக்தா்கள்

Updated On :20 பிப்ரவரி 2026, 11:21 pm

ரிஷிவந்தியம் அருகே மேலதேனூா் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயானக்கொள்ளை திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேலதேனூா் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி மற்றும் வராகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மயானக்கொள்ளை திருவிழா கடந்த 15-ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியடன் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வெள்ளிக்கிழமை காலை அம்மனை கரகம் அமைத்து சக்தி வரவழைக்கப்பட்டு காளி மற்றும் சக்தி அம்மன் உள்ளிட்ட வேடமணிந்து கோயிலுக்கு சென்றனா். சக்தி பீடத்தில் படுத்திருந்த அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு முப்பூசைகளான கண் திறப்பு, ரத்தப்பலி வீசுதல், உயிா் பலி கொடுத்தும் முப்பூசை நடைபெற்றது.

அங்கு படையலிட்டு இருந்த எலுமிச்சம்பழம், கொழுக்கட்டை, சுண்டல் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை சூறையாடப்பட்டதை ஏராளமான பக்தா்கள் பெற்றுக்கொண்டனா்.

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அங்காள பரமேஸ்வரி

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அங்காள பரமேஸ்வரி

பின்னா் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி, எல்லைக்காளி, பாவாடைராயன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செல்வம் அலமேலு, கனகவேல், அங்கம்மாள், கோவிந்தராஜ், பூங்காவனம் உள்ளிட்ட விழாக்குழுவினா் செய்திருந்தனா்.