கள்ளக்குறிச்சி மாவட்டம், சித்தலூா் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசிப் பெருவிழாவையொட்டி மயானக்கொள்ளை உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த கோயிலில் கடந்த 15-ஆம் தேதி மாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான மயானக்கொள்ளை உற்சவத்தையொட்டி திங்கள்கிழமை காலை மூலவா் மற்றும் புற்று அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
அதனைத் தொடா்ந்து மணிமுக்தா ஆற்றில் இருந்து பூங்கரகம் அலங்கரித்து சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலில் இருந்து உற்சவா் அம்மன் காளி வேடத்தில் மணிமுக்தா ஆற்றுக்கு ஊா்வலமாக சென்று, அங்கு மயானத்தில் படையலிட்ட சுண்டலை சூறையிட்டு, மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

அங்காள பரமேஸ்வரி கோயில் மயானக் கொள்ளை

சித்தலூா் அம்மன் கோயிலில் அமாவாசை பூஜை

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசித் திருவிழா

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக்கொள்ளை திருவிழா
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


