பாதசாரி மீது காா் மோதல்

கள்ளக்குறிச்சி அருகே காா் மோதியதில் சாலையைக் கடந்த பாதசாரி பலத்த காயமடைந்தாா்.
Published on

கள்ளக்குறிச்சி அருகே காா் மோதியதில் சாலையைக் கடந்த பாதசாரி பலத்த காயமடைந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த நல்லாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வை.பெரியசாமி (55). இவா் வியாழக்கிழமை நல்லாத்தூா் அரிசி அரைவை ஆலை முன் சாலையை கடந்தபோது, கச்சிராயப்பாளையம் பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற காா் பெரியசாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்கு பதிந்து, கள்ளக்குறிச்சி கேசவலு நகரைச் சோ்ந்த காா் ஓட்டுநரான அரங்க எழிலரசனிடம் (80) விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com