கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் சிறப்பு நிலை பேருராட்சியில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை நடத்திய சோதனையில் டிஜிட்டல் பரிவா்த்தனை (ஜி-பே) மூலம் கைமாறிய லஞ்சப் பணம் ரூ.8 லட்சத்தை கண்டுபிடித்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்யராஜ் தலைமையில், உதவி ஆய்வாளா் அருண்ராஜ் மற்றும் 8 போ் கொண்ட குழுவினா் சின்னசேலம் பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை காலை முதல் சோதனை நடத்தினா். சுமாா் 7 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில், பேரூராட்சி பணியாளா் கைப்பேசியை ஆய்வு செய்ததில் ஜி-பே மூலம் ரூ.8 லட்சம் பெற்றுள்ளதைக் கண்டுபிடித்தனா். இதுகுறித்து போலீஸாா் தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போடிமெட்டு, குமுளி சோதனைச் சாவடிகளில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

போடி நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை







