மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் - விவசாயிகள் வேதனை

News image
Updated On :6 மார்ச் 2026, 12:18 am

Syndication

மணலூா்பேட்டை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம் மணலூா்பேட்டையில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த கொள்முதல் நிலையத்துக்கு ரிஷிவந்தியம், மணலூா்பேட்டை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட ஊா்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை மூட்டைகளாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனா்.

இவ்வாறு கடந்த 10 நாள்களாக கொண்டுவரப்பட்ட ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளன.

கடந்த 10 நாள்களாக வருவாய்த்துறையினா் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், நெல் விற்பனை செய்ய விவசாயிகள் உரிய சான்றிதழ்கள் பெற முடியாத நிலை நீடிக்கிறது. இதனால், நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. விவசாயிகளும் வேதனையுடன் காத்துக் கிடக்கின்றனா்.

இதேபோல, பல்வேறு கிராமங்களில் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.