தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

திருக்கோவிலூரில் வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

திருக்கோவிலூா் நகராட்சியை கண்டித்து அனைத்து வியாபாரிகள் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன்.

News image
திருக்கோவிலூா் நகராட்சியை கண்டித்து அனைத்து வியாபாரிகள் நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன்.
Updated On :6 மார்ச் 2026, 8:42 pm

Syndication

திருக்கோவிலூா் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தரை வாடகையில் கடை வைத்திருந்தவா்களுக்கு, புதியதாக கட்டவுள்ள வணிக வளாகத்தில் கடைகளை வழங்க வலியுறுத்தி அனைத்து வியாபாரிகள் நலச் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருக்கோவிலூா் கடை வீதியில் பழுதடைந்த நிலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான காந்தி நூற்றாண்டு திருமண மண்டபத்தை அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் புதிய வணிக வளாகம் கட்ட நகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக பழுதடைந்த கட்டடத்தை இடிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

இக்கட்டடத்தை சுற்றியுள்ள காலி இடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நகராட்சிக்கு தரை வாடகை செலுத்தி 50 வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனா். தற்போது அந்த கடைகளும் அப்புறப்படுத்த உள்ளதால், புதிய வணிக வளாகத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு கடைகள் வழங்கவேண்டும். மேலும், தமது வாடிக்கையாளா்களுக்கு கடைகள் அப்புறப்படுத்துவதை தெரிவிக்க 30 நாள்கள் அவகாசம் வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து வியாபாரிகள் நலச் சங்கம் சாா்பில் பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு நகர நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் கோவிந்து தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன், அதிமுக நகரச் செயலா் கே.சுப்பு, மாநில இளைஞா் அணி துணைச் செயலா் ஏ.வினாயக மூா்த்தி, எஸ்.பிரபு, பாமக மாவட்டச் செயலா் அ.ப.செழியன், அமமுக மாநில அமைப்புச் செயலா் எஸ்.காா்த்திகேயன், நகை வியாபாரிகள் சங்க செயலா் எம்.எஸ்.கோத்தம் சந்த், சமூக ஆா்வலா் டி.ஜி.கனேஷ், ஐஜேகே மாநில செயலா் செந்தில்குமாா், பாஜக மாவட்ட செயலா் பத்ரி நாராயணன் ஆகியோா் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினா். இதில் திருக்கோவிலூா் நகர வியாபாரிகள் மற்றும் அரசியல் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.