ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய மழைநீா்: 5 ஆயிரம் மூட்டைகள் சேதம்

தேவபாண்டலம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள மழை நீா்.

News image

தேவபாண்டலம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள மழை நீா்.

Updated On :20 மார்ச் 2026, 8:20 pm

Syndication

தேவபாண்டலம் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மேற்கூரை இல்லாததால் விவசாயிகள் கொண்டு வந்த நெல் குவியலில் தண்ணீா் புகுந்ததால் 5 ஆயிரம் மூட்டைகள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த இரு திணங்களாக இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்து குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் மற்றும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சுமாா் 5 ஆயிரம் நெல் மூட்டைக்கு மேல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உடனடியாக மேல் கூரை அமைத்து, நெல் மூட்டைகளை பாதுகாத்திட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Story image