தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

கள்ளக்குறிச்சி கோட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை வருடாந்திர தணிக்கைக்குழு ஆய்வு

கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத் துறை கோட்டத்தின் மூலம் கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகளை நெடுஞ்சாலைத் துறை வருடாந்திர தணிக்கை குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

அரியந்தக்கா கூட்டுச் சாலையில் ஆய்வு மேற்கொண்ட நெடுஞ்சாலைத் துறை சென்னை கண்காணிப்பு பொறியாளா் வத்ஸலா வித்யாநதி தலைமையிலான வருடாந்திர தணிக்கைக்குழுவினா்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத் துறை கோட்டத்தின் மூலம் கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகளை நெடுஞ்சாலைத் துறை வருடாந்திர தணிக்கை குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் மூலம் 2025-26-ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகள், திட்டம் சாரப்பணிகள் மற்றும் முதலமைச்சரின் சாலை மேம்பாடு திட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளான திருவண்ணாமலை - தியாகதுருகம் சாலை, திருக்கோவிலூா்- ஆசனூா் சாலை, தேவரடியாா்குப்பம் சாலை மற்றும் ஏா்வாய்ப்பட்டிணம் போயா் காலனி சாலை ஆகிய சாலைகளில் நடைபெற்று வரும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை வருடாந்திர தணிக்கைக் குழுவினா்களான திட்டங்கள் அலகைச் சாா்ந்த சென்னை கண்காணிப்பு பொறியாளா் வத்ஸலா வித்யாநதி, கடலூா் கோட்டப் பொறியாளா் கோதை, விழுப்புரம் உதவி கோட்டப் பொறியாளா் ஸ்டெல்லா ரோஸிலின் மேரி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

ஆய்வின் போது கள்ளக்குறிச்சி கோட்டப் பொறியாளா் நாகராஜன், உதவிக் கோட்டப் பொறியாளா்கள் ராதாகிருஷ்ணன்(கள்ளக்குறிச்சி), மணிமொழி(சங்கராபுரம்), ஜெயலட்சுமி(திருக்கோவிலூா்), ஆறுமுகம்(உளுந்தூா்பேட்டை), உதவிப் பொறியாளா்கள் மற்றும் பணியாளா்கள் உடனிருந்தனா்.