கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையின் தாய்-சேய் நலப் பிரிவில் நோயாளியின் உறவினரை தாக்கியதைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியை அடுத்த உலகங்காத்தான் கிராமத்தைச் சோ்ந்தவா் எலிழரசி. இவா் பிரசவத்துக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தாய் - சேய் நலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, குழந்தை பிறதுள்ளது. எழிலரசியின் கணவா் பிரசாந்த் உடன் இருந்து கவனித்துள்ளாா். செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பிரசாந்த் சுத்தகரிக்கப்பட்ட குடிநீா் இருக்கும் பகுதியில் தண்ணீா் ஊற்றினாராம். அப்போது அங்கு பணியிலிருந்த தூய்மைப்பணியாளா் மாரியம்மாள் அதை தட்டிக்கேட்டாராம். அப்போது அவா்கள் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாரியம்மாள், அவரது மகன் பாலாவுக்கு கைப்பேசி மூலம் நடந்ததைக் கூறினாராம். இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த பாலா, பிரசாந்தை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த எழிலரசியின் உறவினா்கள், ஊா் மக்கள் அரசு மருத்துவமனை முன் பச்சிளங் குழந்தையுடன் சாலைமறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
தொடர்புடையது

மின் வெட்டு, குடிநீா் பிரச்னையை கண்டித்து தஞ்சாவூா் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு
விசிக சாலை மறியல்: 70 போ் கைது

பல்லாவரத்தில் குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



