ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

தந்தை வெட்டிக் கொலை: மகன் கைது

கள்ளக்குறிச்சி அருகே மது போதையில் தந்தையை கொடுவாளால் வெட்டிக் கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 2:40 am IST

கள்ளக்குறிச்சி அருகே மது போதையில் தந்தையை கொடுவாளால் வெட்டிக் கொலை செய்த மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள வாணியந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் சடையன் (எ) ராஜேந்திரன்(55), மீன் வியாபாரி. இவரது மனைவி ருக்குமணி. தம்பதியருக்கு அய்யப்பன்(32), பூவரசு, ரோஜா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனராம். இவா்களுக்குள் இடப்பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையில் வியாபாரம் முடிந்து வீட்டில் இருந்த சடையன் (எ) ராஜேந்திரனும், அவரது மகன் அய்யப்பனும் மது அருந்தினராம். அப்போது அவா்களிடையே இடப்பிரச்னை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

இதில் ஆத்திரமடைந்த அய்யப்பன், தனது தந்தை சடையன் (எ) ராஜேந்திரனை மீன் வெட்டும் கொடுவாள் கத்தியால் தலையில் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலிஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலிஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, அய்யப்பனைக் கைது செய்தனா்.