அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கே 11-ஆம் வகுப்பில் சேர முன்னுரிமை

அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயின்றவர்களுக்கே 11-ம் வகுப்பில் சேர முன்னுரிமை தர வேண்டும் என பல்வேறு கட்சி எம்.எல்.ஏக்கள் பேரவையில் வலியுறுத்தி உள்ளனர்.
Updated on
1 min read

அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயின்றவர்களுக்கே 11-ம் வகுப்பில் சேர முன்னுரிமை தர வேண்டும் என பல்வேறு கட்சி எம்.எல்.ஏக்கள் பேரவையில் வலியுறுத்தி உள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயின்றவர்களுக்கே
11-ஆம் வகுப்பில் சேர முன்னுரிமை தர வேண்டும் உறுப்பினர்கள் சிவா, விஜயவேணி, கொறடா ஆகியோரும் தனியார் பள்ளிகளில் கட்டணத்தை சீரமைக்க வேண்டும் என்று அசனாவும் கோரிக்கை விடுத்துப் பேசினர்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் கமலக்கண்ணன் கூறியதாவது: இதுகுறித்து சரியான அறிவிப்பு வெளியிடப்படும். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கட்டணக் குழு கேட்ட விவரங்களை 100 பள்ளிகள் தர மறுக்கின்றன.
இதற்காக கடந்த மாதம் ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது. நீதிபதியிடம் பேரவையின் உணர்வுகளை தெரிவிப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com