பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பிப்.12-இல் புதுவை தமிழ்ச் சங்கத் தேர்தல்

புதுவை தமிழ்ச் சங்கத்துக்கான தேர்தல் வரும் பிப்.12-ல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :10 ஜனவரி 2017, 8:23 am IST

புதுவை தமிழ்ச் சங்கத்துக்கான தேர்தல் வரும் பிப்.12-ல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 புதுவை தமிழ்ச் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர்களின், பொதுக்குழுக் கூட்டம் வில்லியனூரில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்து தலைமை வகித்தார்.
 செயலர் மு.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். கூட்டத்தில், வரவு, செலவு கணக்குகளை படித்து, பொதுக்குழு ஒப்புதல் வழங்கிய பிறகு, புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்ய, தேர்தல் ஆணையராக முன்னாள் நீதிபதி சேதுமுருகபூபதியை நியமித்து பொதுக் குழுவில் தீர்மானித்தனர்.
 பின்னர், நிறைவேற்றிய தீர்மானங்கள்: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழறிஞர் வ.செ.குழந்தைசாமி, கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, கவிஞர் இன்குலாப், புதுவை தமிழறிஞர்கள், தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. புதுவை தமிழ்ச் சங்க ஆட்சிக் குழுவிற்கு 11 உறுப்பினர்களை, வரும் பிப்.20-க்குள் தேர்தல் நடத்தி தேர்வு செய்து தருமாறு, தேர்தல் ஆணையர் சேதுமுருகபூபதியிடம் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
 புதுவைத் தமிழ்ச் சங்க வாழ்நாள் உறுப்பினர்கள், தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக் குழுவுக்கும், ஆட்சிக் குழுவினரால் தேர்வு செய்யப்படும் பொறுப்பாளர்கள் பதவிக்கும் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
 இதனையடுத்து, தேர்தல் ஆணையராக பொறுப்பேற்கும் முருகபூபதி கூறியது: புதுவையில் வரும் பிப்.12-இல் தமிழ்ச் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
 தமிழ்ச் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். சங்கப் பொருளாளர் கோவிந்தராசு நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.