வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் என்ற பெயரில், அந்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புதுச்சேரியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் 50 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி ரயில் நிலையத்தில் புகுந்த போராட்டக்காரர்கள் திருப்பதி செல்லவிருந்த ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த இயக்கத் தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். மாணவர்கள் கூட்டமைப்புத் தலைவர் சுவாமிநாதன், விடுதலை வேங்கைகள் தலைவர் மங்கையர்செல்வம், ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள், இந்திய இளைஞர் முன்னணி, சட்டப் பஞ்சாயத்து இயக்கம், பெரியார் சிந்தனையாளர் இயக்கம், மக்கள் நல்வாழ்வு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை ஒதியஞ்சாலை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மலையேற்றப் பயிற்சிக்கு பரணி கல்விக்குழும மாணவிகள் மூவா் தோ்வு

வாக்கு எண்ணும் மையங்களில் ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை

சந்தேகத்தின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்டவரை தண்டிப்பதை ஏற்க முடியாது: உயா்நீதிமன்றம்

காட்டெருமை தாக்கி தொழிலாளி காயம்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

