இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

நெட்டப்பாக்கம் போலீஸாருக்கு டிஜிபி பாராட்டு

நாட்டின் சிறந்த காவல் நிலையங்களில் 4-ஆவது  இடத்தைப் பிடித்த புதுவை நெட்டப்பாக்கம் காவல் நிலைய போலீஸாருக்கு காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சுந்தரி நந்தா இனிப்பு வழங்கி பாராட்டினார்.

Updated On :25 டிசம்பர் 2018, 9:30 am IST

நாட்டின் சிறந்த காவல் நிலையங்களில் 4-ஆவது  இடத்தைப் பிடித்த புதுவை நெட்டப்பாக்கம் காவல் நிலைய போலீஸாருக்கு காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சுந்தரி நந்தா இனிப்பு வழங்கி பாராட்டினார்.
நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலில் புதுவை மாநிலத்தின் நெட்டப்பாக்கம் காவல்நிலையம் நான்காம் இடத்தை வகிக்கிறது.
 இந்த நிலையில், மாநில காவல்துறை தலைமை இயக்குநர் சுந்தரி நந்தா திங்கள்கிழமை நெட்டப்பாக்கம் காவல்நிலையம் சென்று பார்வையிட்டார். அப்போது, காவல் அதிகாரிகளையும், காவலர்களையும் பாராட்டிய அவர், அவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
 தொடர்ந்து செய்தியாளர்களிடம் டிஜிபி சுந்தரி நந்தா கூறியதாவது: 
நாட்டின் சிறந்த காவல் நிலையங்களில் 4-ஆவதாக நெட்டப்பாக்கம் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டிருப்பது நமது மாநிலத்துக்கு கிடைத்த கெளரவம். 
மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் தேவைகளை நிறைவு செய்ய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.