புதுச்சேரியில் 16 வயது சிறுமியை மிரட்டி பாலியன் வன்கொடுமை செய்ததாக 2 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமி, விழுப்புரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு அடிக்கடி பேருந்தில் சென்று வந்தபோது, வழுதாவூர் பகுதியைச் சேர்ந்த விக்கி என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்தச் சிறுமியை விக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை தனது செல்லிடப்பேசியில் பதிவு செய்ததுடன், அதை காண்பித்து சிறுமியை மிரட்டி ஒரு வீட்டில் அடைத்து வைத்து, தனது நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து மீண்டும் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீஸார் விக்கி உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வந்தனர். இந்த நிலையில் விக்கி (20), முகிலன் (19), சூர்யா (20) மற்றும் 17 வயது சிறுவர்கள் இரண்டு பேர் என 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரணை நடத்தி அவர்களைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரொனால்டோ இரட்டை கோல்: 5-0 கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது போர்ச்சுகல்!

மத்திய அரசுத் துறைகளில் வேலை: எழுத்துத் தேர்வுக்கு 26-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

நைஜீரியாவில் ஆயுதக் குழு தாக்குதல்

வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


