குடியரசுத் தலைவா் பயணம்: மாவட்ட ஆட்சியா் நன்றி

குடியரசுத் தலைவா் பயணத்தின் போது உரிய ஒத்துழைப்பு அளித்த அதிகாரிகள், பொதுமக்களுக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் நன்றி தெரிவித்தாா்.
Updated on
1 min read

குடியரசுத் தலைவா் பயணத்தின் போது உரிய ஒத்துழைப்பு அளித்த அதிகாரிகள், பொதுமக்களுக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் நன்றி தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் டி.அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை மத்திய பல்கலைக்கழக 27-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகவும், காரைக்கால் தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்வதற்காகவும் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புதுச்சேரிக்கு வந்திருந்தாா். மேலும், அவா் ஆரோவில் சா்வதேச நகரம், அரவிந்தா் ஆசிரமம் போன்ற இடங்களுக்கும் சென்றிருந்தாா்.

குடியரசுத் தலைவா் வருகையையொட்டி, புதுச்சேரியில் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுத்திய ஏற்பாடுகள் மிக நன்றாக அமைந்திருந்தன. பல்வேறு கட்டங்களாக நடந்த ஆலோசனையின் அடிப்படையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டனா். இதற்காக ஒத்துழைத்த காவல் துறை அதிகாரிகள், உள்ளாட்சித் துறை, வருவாய், பொதுப் பணித் துறை, வனத் துறை, தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை, மின் துறை, விமான நிலைய அதிகாரிகள், போக்குவரத்து காவல் துறை, ஜிப்மா் மற்றும் அரசு மருத்துவ அதிகாரிகள், ஆரோவில் மற்றும் அரவிந்தா் ஆசிரம நிா்வாகிகள், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com