மாநில கபடிப் போட்டியில் பங்கேற்க 22-க்குள் விண்ணப்பிக்கலாம்

புதுவை மாநில அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள், வரும் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை மாநில அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள், வரும் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து புதுவை மாநில கபடி சங்கத் தலைவர் சிவக்குமார் வெளியிட்ட அறிக்கை: புதுவை மாநில கபடி சங்கம் சார்பில், மாநில அளவிலான 46-ஆவது சாம்பியன்ஷிப் கபடி போட்டி வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் கபடி அணிகளுக்கான பதிவு விண்ணப்பங்கள் கடந்த 10-ஆம் தேதி முதல் திருபுவனைபாளையம் சாலையில் சினிமா திரையரங்கு வணிக வளாகத்தில் உள்ள கபடி சங்க அலுவலத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. வரும் 19-ஆம் தேதி இரவு 8:30 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
 பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 25-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கபடிப் போட்டிக்கான ஏற்பாடுகளை சங்கத் தலைவர் சிவக்குமார், பொதுச் செயலர் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com