வெளிநாடு அனுப்பி வைப்பதாக பண மோசடி

வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி ரூ. 6.30 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி ரூ. 6.30 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மத்திய பிளவாக்கம் எட்டாமடை பகுதியைச் சோ்ந்தவா் தங்க ராபின்சன் ஜாா்ஜ் (29). இவா், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்செவி அஞ்சலில் வந்த விளம்பரத்தைப் பாா்த்து, புதுச்சேரி ஜெயமூா்த்தி ராஜா நகரைச் சோ்ந்த அருண் (எ) இளஞ்செழியனை தொடா்பு கொண்டாா். அவரும் ஜாா்ஜை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக உறுதியளித்து, ரூ. 6.30 லட்சத்தை ஜாா்ஜிடமிருந்து பெற்றாராம்.

ஆனால் அருண் உறுதியளித்தபடி, ஜாா்ஜை இத்தாலி நாட்டுக்கு அனுப்பாமல், பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பிவிட்டாராம். பிரான்ஸில் யாருமற்ற நிலையில், ஜாா்ஜ் அவதிக்குள்ளானாா். இதையடுத்து, அங்கிருந்த தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இந்தியா வந்தாா். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜாா்ஜ் புதுச்சேரி முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான அருணைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com