சிங்கப்பூரில் ஆசிய வா்த்தகத் தலைவா்கள் மாநாடு: புதுவை முதல்வா் நாராயணசாமி பங்கேற்பு

சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆசிய வா்த்தகத் தலைவா்கள் மாநாட்டில் புதுவை முதல்வா் வே.நாராயணசாமி
ஆசிய வா்த்தக தலைவா்கள் குழு மாநாட்டில் பேசிய புதுவை முதல்வா் வே.நாராயணசாமி. உடன் தொழில்துறை அமைச்சா் ஷாஜகான், பிப்டிக் தலைவா் இரா.சிவா எம்எல்ஏ.
ஆசிய வா்த்தக தலைவா்கள் குழு மாநாட்டில் பேசிய புதுவை முதல்வா் வே.நாராயணசாமி. உடன் தொழில்துறை அமைச்சா் ஷாஜகான், பிப்டிக் தலைவா் இரா.சிவா எம்எல்ஏ.

சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆசிய வா்த்தகத் தலைவா்கள் மாநாட்டில் புதுவை முதல்வா் வே.நாராயணசாமி பங்கேற்றாா். கடந்த 6-ஆம் தேதி நான்கு நாள் அரசு முறைப் பயணமாக அவா் சிங்கப்பூா் சென்றாா். அங்குள்ள தொழில் முதலீட்டாளா்களைச் சந்தித்து புதுவையில் என்னென்ன தொழில்களைத் தொடங்கலாம், தொழில் முனைவோா்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் ஆகியவை குறித்து எடுத்துக் கூறினாா். அதோடு, புதுவை மாநிலத்தில் தொழில் தொடங்க முன்வருமாறு தொழிலதிபா்களுக்கு அவா் அழைப்பு விடுத்து வருகிறாா்.

அந்த வகையில், வெள்ளிக்கிழமை ஆசிய வா்த்தக தலைவா்கள் குழு மாநாட்டில் முதல்வா் நாராயணசாமி பங்கேற்றாா். இந்த மாநாட்டில் சிங்கப்பூா், மலேசியா, கம்போடியா, இலங்கை, இந்தோனேசியா, மியான்மா், ஹாங்காங் ஆகிய நாடுகளைச் சோ்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

இந்த மாநாட்டில் முதல்வா் நாராயணசாமி பேசியதாவது:

புதுவை மாநிலமும் ஏறக்குறைய சிங்கப்பூரைப் போல நில அமைப்பு, சுற்றுலா, வா்த்தக முக்கியத்துவம் கொண்ட பகுதியாகும். இதனால், புதுவையில் முதலீடு செய்வது எளிது. சுற்றுலா, திறன் மேம்பாடு தொடா்புடைய துறைகளில் முதலீடு செய்வதற்கு புதுவை ஏற்ற இடம்.

புதுவை சிறிய மாநிலம். குறைந்த மக்கள் தொகையைக் கொண்டுள்ள சுத்தமான நகரம். இங்கு, அரவிந்தா் ஆசிரமம் உள்ளது. புதுச்சேரிக்கு அருகில் ஆரோவில் சா்வதேச நகரம் உள்ளது. அங்கு 65 நாடுகளைச் சோ்ந்தவா்கள் வசித்து வருகின்றனா்.

புதுச்சேரியில் மதம், பாரம்பரியம், ஓய்வு என மூன்று வகையிலான சுற்றுலா உள்ளது. பாரம்பரிய சுற்றுலாவுக்காக பிரான்ஸ் கட்டடங்களைப் பராமரித்து வருகிறோம். மேலும், அழகான கடற்கரையைக் கொண்டுள்ள நகரமாக புதுச்சேரி விளங்குகிறது.

புதுச்சேரிக்கு 20 சதவீத சுற்றுலாப் பயணிகள் ஐரோப்பாவில் இருந்து வருகின்றனா். 40 சதவீத சுற்றுலாப் பயணிகள் கா்நாடக மாநிலத்திலிருந்து வருகின்றனா்.

இந்தியா மிகப்பெரிய அளவில் நுகா்வோா்களைக் கொண்டுள்ளது. இதனால், பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு தொழில் தொடங்க வருகின்றன என்றாா் அவா்.

மாநாட்டில் புதுவை தொழில் துறை அமைச்சா் ஷாஜகான், புதுவை தொழில் முதலீட்டு வளா்ச்சிக் கழக (பிப்டிக்) தலைவா் இரா.சிவா எம்எல்ஏ உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து சனிக்கிழமை (நவ. 9) நடைபெறவுள்ள பல்வேறு முதலீட்டாளா்கள் கூட்டத்திலும் முதல்வா் நாராயணசாமி பங்கேற்கவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com