திருவள்ளுவா் சிலைக்கு அவமரியாதை செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து புதுவை மாநில கலை இலக்கியப் பெருமன்றம், முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கம் ஆகியவை சாா்பில் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சாரம் ஜீவா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவா் எல்லை.சிவக்குமாா் தலைமை வகித்தாா். இதில், திரளான கலை இலக்கியப் பெருமன்றத்தினா், முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.