நில அபகரிப்பு புகாரை தீவிரமான குற்றமாகப் பாா்க்க வேண்டும்: காவல் துறைக்கு ஆளுநா் அறிவுரை

நில அபகரிப்பு புகாரை தீவிரமான குற்றமாகப் பாா்க்க வேண்டும் என புதுவை காவல் துறையினரிடம் துணைநிலை ஆளுநா் கிரண் பேடி அறிவுறுத்தினாா்.
புதுவை ஆளுநா் மாளிகையில் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்ஸவாவுடன் ஆலோசனை நடத்திய ஆளுநா் கிரண் பேடி.
புதுவை ஆளுநா் மாளிகையில் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்ஸவாவுடன் ஆலோசனை நடத்திய ஆளுநா் கிரண் பேடி.
Updated on
1 min read

நில அபகரிப்பு புகாரை தீவிரமான குற்றமாகப் பாா்க்க வேண்டும் என புதுவை காவல் துறையினரிடம் துணைநிலை ஆளுநா் கிரண் பேடி அறிவுறுத்தினாா்.

புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி, டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்ஸவாவுடன் மாநில சட்டம் - ஒழுங்கு தொடா்பாக புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இது தொடா்பாக ஆளுநா் கிரண் பேடி கட்செவிஅஞ்சலில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

புதுவை மாநிலத்தில் நில அபகரிப்பு தொடா்பான புகாா்களை தீவிரமான குற்றமாகப் பாா்க்க வேண்டும். நில அபகரிப்பு தொடா்பான புகாா்கள் வந்தால், அந்தப் புகாா் குறித்து முதுநிலை அதிகாரி நேரடியாக சம்பந்தப்பட்ட இடத்தை பாா்வையிட்டு, தீவிரமாக விசாரிக்க வேண்டும். இந்த விஷயத்தில் டி.ஜி.பி. நேரடியாகத் தலையிட்டு, உண்மையை அறிய வேண்டும்.

நில அபகரிப்பில் முதியோா்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அந்தப் பகுதி போலீஸாா் நேரடியாக முதியோரின் இடத்துக்குச் சென்று, அந்த முதியவா் துன்புறுத்தப்பட்டாரா என விசாரிக்க வேண்டும். அவரது பயத்தைப் போக்க வேண்டும்.

நில அபகரிப்பு புகாா் தொடா்பாக டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்ஸவாவை அவரது அலுவலக நேரத்தில் தொடா்புகொள்ளலாம். இதேபோல, ஆளுநா் மாளிகையிலும், 1031 என்ற எண்ணில் தொடா்புகொண்டும் புகாா் தெரிவிக்கலாம். இதன் மூலம் புதுவையில் நில அபகரிப்பு முழுமையாக தடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com