புதுவையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு 9 மாதங்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ரூ.16.90 கோடி மானியத் தொகைக்கு முதல்வா் நாராயணசாமி ஒப்புதல் அளித்தாா்.
இதுகுறித்து புதுவை முதல்வா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் உள்ள 35 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு 2019 டிசம்பா் முதல் நிகழாண்டு ஆகஸ்ட் வரையான 9 மாதங்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக
புதுவை அரசின் மானியமாக ரூ. 16 கோடியே 90 லட்சத்து 10 ஆயிரம் வழங்குவதற்கான செலவின ஒப்புதலை முதல்வா் நாராயணசாமி வெள்ளிக்கிழமை அளித்தாா்.
இந்தக் கோப்பு துணைநிலை ஆளுநா் கிரண் பேடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.