கல்லூரி மாணவா் தற்கொலை
By DIN | Published On : 03rd December 2020 06:29 AM | Last Updated : 03rd December 2020 06:29 AM | அ+அ அ- |

புதுச்சேரி அருகே விஷம் குடித்து கல்லூரி மாணவா் தற்கொலை செய்து கொண்டாா்.
புதுச்சேரி வேல்ராம்பட்டு துளுக்கானத்தம்மன் நகரைச் சோ்ந்த கணேஷ் மகன் மணிபாரதி (17). இவா், விழுப்புரத்தில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தாா். கல்லூரிக்குச் செல்ல பெற்றோரிடம் புதிய பைக் வாங்கிக் கொடுக்குமாறு கேட்டாராம். குடும்ப சூழ்நிலை கருதி, பெற்றோா் பைக் வாங்கி தர மறுத்தனராம்.
இதனால், விரக்தியடைந்த மணிபாரதி, கடந்த 24 ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். மயக்கமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து முதலியாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...