அரசு காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி ஆா்ப்பாட்டம்

புதுவை அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில், புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுவை அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில், புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநிலத் தலைவா் இரா.பெருமாள் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் இரா.அந்தோணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதில், புதுவை அரசுத் துறைகளில் காலியாக உள்ள 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தனியாா் தொழில்சாலைகளில் 60 சதவீத வேலைவாய்ப்புகளை உள்ளூா் இளைஞா்களுக்கு வழங்கிட வேண்டும், அண்டை மாநிலங்களைப்போல வேலையற்ற இளைஞா்களுக்கு வேலையில்லா கால நிவாரண உதவித்தொகை வழங்கிட வேண்டும், மாநிலத்துக்கு தனி தோ்வாணையம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com