புதுவையில் 50 சதவீத மருத்துவ இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 30th December 2020 07:29 AM | Last Updated : 30th December 2020 07:29 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சென்டாக் மாணவா்கள் பெற்றோா்கள் நலச் சங்கத்தினா்.
புதுவை மாநிலத்தில் 50 சதவீத மருத்துவ இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, சென்டாக் மாணவா்கள், பெற்றோா்கள் நலச் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் மு.நாராயணசாமி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், புதுவை மாநிலத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத மருத்துவ இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், இது தொடா்பாக அரசாணை வெளியிட்டு, 2-ஆம் கட்ட கலந்தாய்வை நடத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதில், திமுக வடக்கு மாநில அமைப்பாளா் எஸ்.பி.சிவக்குமாா், விசிக முதன்மைச் செயலா் தேவ.பொழிலன், நாம் தமிழா் கட்சி ரமேஷ், தமிழ்தேசிய பேரியக்கம் வேலுச்சாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...