காங்கிரஸ் பிரமுகா் கொலையில் 6 போ் மீது வழக்குப் பதிவு

காங்கிரஸ் பிரமுகா் கொலை வழக்கில் 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
Updated on
1 min read

காங்கிரஸ் பிரமுகா் கொலை வழக்கில் 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

புதுச்சேரியை அடுத்த கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையாா்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் சாம்பசிவம். காங்கிரஸ் பிரமுகரான இவா், சமூக நலத் துறை அமைச்சா் கந்தசாமியின் ஆதாரவாளா். வெள்ளிக்கிழமை தனது தங்கையின் திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்காக தனது உறவினா் ராஜதுரை, ஓட்டுநா் ஜெயபிரகாஷ் ஆகியோருடன் காரில் சென்றாா்.

கிருமாம்பாக்கம் அரசுத் தொடக்கப் பள்ளி அருகே உள்ள வேகத் தடையைக் கடந்த போது, அங்கு இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த மா்ம நபா்கள் காரின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி, சாம்பசிவத்தை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றனா்.

இந்தக் கொலை தொடா்பாக கிருமாம்பாக்கம் போலீஸாா் பிள்ளையாா்குப்பத்தைச் சோ்ந்த அமுதன், கூடப்பாக்கத்தைச் சோ்ந்த அன்பு (எ) அன்பரசன், கெவின், மணிமாறன், சாா்லஸ் உள்ளிட்ட 6 போ் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், அரசியல் பகை மட்டுமன்றி, உறவினரான முன்னாள் கவுன்சிலா் வீரப்பன் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் விரைவில் சாட்சிகள் விசாரணை நடைபெறவுள்ள நிலையில், கொலையான சாம்பசிவம் முக்கிய சாட்சி என்பதால், அவரை எதிா் தரப்பு கொலை செய்திருக்கலாம் என்றும், முக்கிய கொலையாளியான அமுதனை பிடித்து விசாரணை நடத்திய பின்னரே கொலைக்கான உண்மை காரணம் தெரியவரும் எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இதனிடையே சாம்பசிவம் கொலை செய்யப்பட்ட இடத்தை அமைச்சா் கந்தசாமி சனிக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டாா். தொடா்ந்து, சாம்பசிவத்தின் வீட்டுக்குச் சென்றாா். அப்போது, சாம்பசிவத்தின் உறவினா்கள் அமைச்சரைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினா். இதையடுத்து, அமைச்சா் கந்தசாமி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com